in

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

ஆடி பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆடி பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பௌர்ணமி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரம்