in

லேட்…டா கல்யாணம் பண்ணுறவரு இந்த விஷயத்தில் கோட்டை விட்டுட்டாரே

லேட்…டா கல்யாணம் பண்ணுறவரு இந்த விஷயத்தில் கோட்டை விட்டுட்டாரே

 

இத்தனை வருடம் கழித்து ஒரு வழியாக இவருக்கு பெண் கிடைத்து கல்யாண தேதியும் முடிவான நிலையில் முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டுடாரே என்று தற்போது கமெண்ட்ஸ்கள் வெளியாகி வருகின்றன .

ஜோம்பி ’பட ஆடியோ வெளியீட்டு விழாவில் முரட்டு சிங்கிள் என்று டி-சர்ட் அணிந்து வந்து எனக்கு எல்லாம் யார் பெண் கொடுக்க போகிறார்கள் நான் எப்பவுமே முரட்டு சிங்கள் தான் என்று Feel பண்ணி பேசியவருக்கு வருகிற ஒன்பதாம் தேதி திருத்தணியில் நெருங்கிய சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் நடக்கிறதாம். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து சென்னையில் ரிசப்ஷன் வைக்கிறார்கள்.

பிரேம்ஜி கல்யாணம் செய்து கொள்ளும் பெண் இந்து ஒரு பாடகியாம். இத்தனை நாள் கழித்து திருமணம் செய்பவர் பிரம்மாண்டமாக செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரின் கல்யாண பத்திரிகை அந்த காலத்தை நினைவுபடுத்தும் வகையில் சாதாரண மஞ்சள் பத்திரிகையாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

பிரேம்ஜியின் அப்பா கங்கை அமரனின் குடும்பதினர் அனைவருடைய பேரும் பத்திரிகையில் இடம் பெற்றிருக்க அவரின் அண்ணனான இளையராஜா பெயர் மற்றும் இடம் பெறவில்லை கங்கை அமரனுக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே ஆனால் சமீப காலமாக கங்கை அமரன் எல்லாம் மேடைகளிலும் தன் அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசும் நிலையில் பத்திரிகையில் மட்டும் அண்ணனின் பெயர் விட்டு விட்டதே ஏன்? என்று பலர் கேள்வி கேட்க கேட்கின்றனர்.

What do you think?

அழகர்கோவில் கண்மாயில் நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழா

காட்டுயானைகள் முகாமிட்டதால் அனுமதி மறுப்பு