in

மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

 

திருச்சி மாவட்டம் துறையூரில் மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திற்கு முன் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் துறையூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மின் கட்டணத்தை கண்டித்து அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்