in

லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் – அமைச்சர் நேரு பேச்சு

லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் – அமைச்சர் நேரு பேச்சு

 

லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை. அமைச்சர் நேரு திருச்சி திமுக உறுப்பினர் கூட்டத்தில் பேச்சு!

திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேரு கலந்து கொண்டு பேசிய போது….

லால்குடி தொகுதியில் கடந்த 2006 முதல் 2021 வரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் வெற்றி பெற்று வருகிறார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பாரிவேந்தர் பச்சமுத்து,‌ என்னை விட 100 மடங்கு வசதி பெற்றவர். அவரை எதிர்த்து போட்டியிட்ட எனது மகன் அருண் நேருவை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி.

லால்குடி மற்றும் கல்லக்குடியில் அதிகமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி திமுக கட்சியை வளர்த்து வருகிறோம். லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை.

அதிமுக பொறுத்த வரையில், யார் தலைவர் என்றே தெரியவில்லை. அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. நான் திருச்சி மட்டுமல்ல எங்கு நின்றாலும், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது லால்குடி தொகுதி தான் என்று பேசினார்.

அமைச்சர் நேருவின் இந்த பேச்சு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உடையும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் என உடன்பிறப்புகள் முனுமுனுத்த படி கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெரியய்யா. சண்முகநாதன். சக்திவேல் பொதுக்குழு உறுப்பினர் விமல், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் முருகவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயர்ந்த விவகாரம் விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது