in

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனை  மதுபானங்கள் பறிமுதல்


Watch – YouTube Click

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனை  மதுபானங்கள் பறிமுதல்

 

பெங்களூரில் இருந்து மதுரைக்கு மதுபானம் கடத்தி வந்த ஐந்து பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்ததோடு 720 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானம் கடத்த பயன்படுத்திய ஆம்னி பேருந்தும் பறிமுதல்.

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்தை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் ஆம்னி பேருந்தில் உள்ள பொருட்கள் வைப்பறையில் புரூட்டி ஜூஸ் பாட்டில்கள் உருவத்திலிருக்கும் 720மது பாட்டில்களை 15 பெட்டிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ததற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து மதுரையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் கோபாலகிருஷ்ணன்24, ஹரிஹரசுதன்2 9, தங்கபாண்டி 26, பழனிகுமார் 30, திலிபன் 25 ஆகிய ஐவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 720 மது பாட்டில்களை பறிமுதல்
செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் மதுபானம் கடத்தி வந்த ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மாதத் தவனை செலுத்தாதல் நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம்

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை