in

சாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்


Watch – YouTube Click

சாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்

 

புதுச்சேரியில் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு புதுச்சேரி எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்

தன்னையும் தனது கணவரின் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டுவதாக புகார்

புதுச்சேரி தவளகுப்பம் தானம் பாளையத்தை சேர்ந்தவர் 23 வயதான ரிஷிகா, இவர் அதே பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் ரிஷிகாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவரை பெற்றோர்கள் கடுமையாக கண்டித்து உள்ளனர்.

ஆனால் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரிஷிகாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இரண்டு பேரும் வீட்டிலிருந்து வெளியேறி கடந்த 23-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன நிலையிலும் பெண்ணின் உறவினர்களிடமிருந்து கொலை மிரட்டல் வரவே அச்சமடைந்த அவர்கள் பாதுகாப்பு கேட்டு இன்று புதுச்சேரி எஸ். எஸ். பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில்… இருவரின் சம்மதத்தோடு வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டோம், ஆனால் தற்போது ஆட்கள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் எனவே பெண் வீட்டாரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுமண தம்பதியான ரிஷிகா….

எனது விருப்பத்தின் பேரிலேயே வீட்டிலிருந்து வெளியேறி வைத்தியநாதனை திருமணம் செய்து கொண்டதாகவும் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை ஆனால் எனது வீட்டார் எனது கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் அவரது வீட்டிற்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் எனவே எனது கணவருக்கும் என் கணவர் வீட்டாருக்கும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு என் வீட்டாரே பொறுப்பு என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

வீராணம் ஏரியின் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுவதால் அதிர்ச்சி

புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் முதலமைச்சர்–துணை நிலை ஆளுநர் ஜில்லுனு ஒரு பயணம்