in

கர்ப்பிணிப் பெண்ணை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை மருத்துவர்கள்

கர்ப்பிணிப் பெண்ணை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை மருத்துவர்கள்

 

கர்ப்பிணிப் பெண்ணை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் – டீன் பெருமிதம்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவத்தின் போது ஏற்பட்ட Guillian Barre syndrome – GBS- AMSAN என்ற நோய்க்கு உரிய முறையில் மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்து முழுவதும் குணமடைந்துள்ளார் தற்பொழுது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தர்மராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தர்மராஜ் கூறுகையில், மத்திய பிரதேச மாநிலத்தை சார்ந்த 26 வயதுடைய பெண் ராஜ்கனி தன் கணவரின் பணி நிமித்தம் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பகுதிக்கு கணவருடன் ஒரு வருடத்திற்கு முன் இடம் பெயர்ந்தார்.

இவ்வேளையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த நிலையில் 29.06.2024 அன்று காலை 4.00 மணியளவில் வீட்டிலேயே ஆண்குழந்தை (எடை: 2.3 கிலோ) பிறந்தது. அடுத்த நாள் கடந்த ஜூன் 30ஆம் தேதி 5.00 அதிகாலையில் வலிப்பு வந்ததன் காரணமாக நெடுகண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக வலிப்பு நோய் (Postpartum Eclampsia) எனப்படும் நோய் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் செயல்படாமலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பல்வேறு மருத்துவ பரிசோதனைக்களுக்குப் பிறகு அவருக்கு குயில்லன் பார்ரே நோய்த்தாக்கம் (Guillian Barre syndrome) GBS- AMSAN எனப்படும் நோய் கண்டறியப்பட்டு IVIG எனப்படும் உயர்சிகிச்சை மருந்து 5 நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவத்துறை பொது பயிற்சியாளர்கள் கண்காணிப்பின் கீழ் அளிக்கப்பட்டது. சிகிச்சையின் பலனாக தற்போது நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் முற்றிலும் நீங்கி கை கால்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இது 1 லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும் அரிய வகை நோய் ஆகும். இதற்குரிய உயர் சிகிச்சை உரிய நேரத்தில் செய்தால் மட்டுமே நோயாளி நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து முழுவதுமாக விடுபடமுடியும்’ என்றார்.

மருந்து துறை தலைவர் டாக்டர் நடராஜன், மருத்துவ சிகிச்சை கண்காணிப்பாளர் டாக்டர் குமரவேல் மருந்து துறை உதவி பேராசிரியர் டாக்டர் சுரேஷ் குமார் இருப்பிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) டாக்டர் ஸ்ரீலதா ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

What do you think?

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூதன முறையில் பிச்சை எடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

மறைந்த கலைஞர் குறித்து பேசிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாராட்டு