in

நாளொன்றுக்கு 1 லட்ச வரையிலான பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படும் அளவிற்கு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது மதுரை எம்பி சு வெங்கடேசன் பேட்டி

நாளொன்றுக்கு 1 லட்ச வரையிலான பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படும் அளவிற்கு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது – மதுரை எம்பி சு வெங்கடேசன் பேட்டி

மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடியில் செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மதுரை எம் பி சு வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

ரயில்வே மறு சீரமைப்பு பணிகள் திட்டமிடபட்ட காலத்தில் முடுவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரையில் 28% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

தொடர்ந்து மத்திய அரசுக்கு ரயில் நிலைய மேம்படுத்த வலியுறுத்தியதால் மதுரை ரயில் நிலையம் 347 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் நிறைவுக்கு பின்னர் மிக அழகான ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் இருக்கும், நாள் ஒன்றுக்குள் 1லட்சம் பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில், ரயில் நிலையத்தில் நான்கு மடங்கு விரிவாக்கம் கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் ஓய்வு அறை, 30 சதவீதம் குளிர்சாதன வசதி இல்லாத பயணிகள் ஓய்வு அறை,

முன்பதிவிள்ளா பெட்டிகள் குறைக்க கூடாது, ஏற்கனவே இருந்த அளவை விட எட்டு மடங்கு பெரிய இரு சக்கர வாகனம் பாதுகாப்பு மையம், 34 மின் தூக்கிகள் புதிதக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தில் இடம் பெற உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டு வரவுள்ளது.

மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து சுரங்கம் மூலம் ரயில் நிலையம் அடைய பயணிகளுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

கூடல் நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக உருவாக்க வேண்டும், அதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து அதனை நடத்த வேண்டும்.

எங்களின் கொள்கைகளை உறுதியுடன் தொடர்வோம், கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுக்கு நன்றிகள் தெரிவித்தது நான் தான்.

தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் தான் மத்திய அரசு பல திட்டங்களை வழங்கி வருகின்றனர்.

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒரு சென்ட் கூட தனியாருக்கு கொடுக்க கூடாது

What do you think?

ஊட்டச்சத்து மாதவிழாவில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்த விழிப்புணர்வு

மதுரையில் மறைந்த இசை மேதை S.P.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி