in ,

கும்பகோணம் அருகே மரத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ மன்மதேஸ்வரர் மற்றும் ஸப்த கன்னிகள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே மரத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ மன்மதேஸ்வரர் மற்றும் ஸப்த கன்னிகள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்..

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் அருகே மரத்துறை தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மன்மதேஸ்வரர் மற்றும் ஸப்த கன்னிகள் ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட இரண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ மன்மதேஸ்வரர் மற்றும் ஸப்த கன்னிகள் பரிவார0 தெய்வங்களின் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மரத்துறை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

What do you think?

தஞ்சை மாவட்டம் மருத்துவக்குடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கநாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தஞ்சையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்