in

வேப்பூர் அருகே வனதுர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

வேப்பூர் அருகே வனதுர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் ஸ்ரீ முருகன் ஸ்ரீ நவகிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது…

தொடர்ந்து அம்மனுக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது., தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி சிறப்பாக செய்திருந்தார்.

வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

கடலூரில் ஸ்ரீமத் உடையவர் சபா முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு

புதுச்சேரியில் நடைபெற்ற காய், கனி, விதை மற்றும் உணவு திருவிழா