in

நத்தம் அருகே சாக்கடை பிரச்சனையில் பெண்ணை தாக்கிய நபர் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நத்தம் அருகே சாக்கடை பிரச்சனையில் பெண்ணை தாக்கிய நபர் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே காந்திநகரை சேர்ந்தவர் குமரேசன். அதே தெருவில் வசித்து வரும் செந்தில்குமார் வீட்டின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது. கழிவுநீர் வாய்க்கால் கட்டுவது தொடர்பாக செந்தில்குமார் மனைவி தனலட்சுமி என்பவருக்கும் குமரேசன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமி வீட்டின் கேட்டை தள்ளிவிட்டு அங்கிருந்த தனலட்சுமி அவரது உறவினர்கள் தன கணேசன், சுரேஷ் மற்றும் தனலட்சுமியின் மாமியார் மாரியம்மாள் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தாக்குதல் சம்பவத்தில் தனலட்சுமி மற்றும் சுரேஷ் இருவருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக சாணார்பட்டி போலீசார் இரு தரப்பினரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

நாமக்கல்லில் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷச விழா

காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா