in ,

நாமக்கல் அருகே மாணிக்கவாசகர் குருபூஜை விழா – திருவாசகம் முற்றோதல்

நாமக்கல் அருகே மாணிக்கவாசகர் குருபூஜை விழா – திருவாசகம் முற்றோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர் – சக்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் ஆலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு எம்பிரான் மாணிக்கவாசகர் குருபூஜையானது சிறப்பாக நடைபெற்றது…

விழாவின் நிகழ்வாக காலை முதல் விநாயகர், முருகப்பெருமான், சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் மற்றும் நால்வர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் பெருமக்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து. நடராஜப் பெருமானுக்கு கொன்றை பூ சாற்றப்பட்டு, திருவாசகம் என்னும் ஞான வேல்வியானது காலை முதல் மாலை வரை பாராயணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பொத்தனூர் சிவ. சிவகுமார் ஐயா, பரமத்தி முத்துக்குமார் ஐயா மற்றும் பரமத்தி, வேலூர், மோகனூர் பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்…. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது… விழா ஏற்பாட்டினை சிவ.சிவகுமார் மற்றும் சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

நாமக்கல்லை அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வர் சிவ ஆலயத்தில் மாணிக்கவாசகர் குரு பூஜை

காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா