in ,

காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா சிவவசந்தா தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மை திருவாசகம் முற்றோதல் பேரவை சார்பில் சிவ. வசந்தா தலைமையில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது இதில் திருவாசகம் முற்றோதல். திருமுறை. தேவாரம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்து வழிபாடு செய்தனர் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர் நடராஜர் திருவடியில் சேர்ந்த நாளை ஒட்டி இந்த குரு பூஜை நடைபெறுகிறது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபால் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு மதியம் அன்னம் பாலிப்பு நடைபெற்று மாலை பிரசாதங்களும் வழங்கப்பட்டது . வரும் 19ஆம் தேதி ஸ்ரீ காமாட்சி அம்மை திருவாசகம் முற்றோதல் பேரவையின் 500 ஆவது திருவாசகம் முற்றோதல் நடைபெற உள்ளதால் அனைத்து சிவனடியார்களும் கலந்து கொண்டு விழா வினை சிறப்பித்து தருமாறு. சிவ. வசந்தா கேட்டுக் கொண்டுள்ளார்

What do you think?

நாமக்கல் அருகே மாணிக்கவாசகர் குருபூஜை விழா – திருவாசகம் முற்றோதல்

காஞ்சிபுரம் ஸ்ரீதேவி பூதேவியுடன் விளக்கொளி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்