in

திருப்புறம்பியத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மக பெருவிழா திருத்தேரோட்டம்

திருப்புறம்பியத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மக பெருவிழா திருத்தேரோட்டம்

 

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மக பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதினம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் அமைந்துள்ள கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இது ஈசனின் 64வது திருவிளையாடல் சாட்சிநாத படலம் அரங்கேறிய தலமாக போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைமிகு சைவத்தலத்தில், 1995ம் ஆண்டிற்கு பிறகு மாசி மக பிரமோற்சவம் பெருவிழா இத்தலத்தில் பல்வேறு காரணங்களினால் நடத்த முடியாமல் தடைப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதில் 293 வது குரு மகா சன்னிதானம் மதுரை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாட்சி நாதா சாட்சி நாதா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து உற்சவர் சாட்சிநாதசுவாமி, தனி தேரில் எழுந்தருளினார். கரும்படு சொல்லியம்மை விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் தனித்தனி கட்டு தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து நாளை 12 ஆம் தேதி புதன் கிழமை பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, பிரம்ம தீர்த்த குளத்தில் பிற்பகல் மாசி மக தீர்த்தவாரியுடன் இவ்வாண்டுக்கான மாசிமக பெருவிழா நிறைவு பெறுகிறது.

What do you think?

சொத்து முடக்கம் இடைக்காலத் தடை விதித்த கோர்ட்

லவ் BREAKUP ….SINGLE…லா இருக்க முடிவு பண்ணிட்டேன்…சிவாங்கி