in

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

 

திமுக அரசு பொதுமக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும் பாமாயில் சமையல் பருப்பு உள்ளிட்ட பொருள்களை ரேஷனில் வழங்காததை கண்டித்தும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு மின் கட்டணத்தை தற்போது உயர்த்தி உள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் முன்பு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று உறுதி அளித்த தமிழக அரசு தேர்தல் முடிந்த பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மக்களை வஞ்சிக்கும் செயல் என்று பல்வேறு அரசியல் தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். திமுக அரசு பொதுமக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும் பாமாயில் சமையல் பருப்பு உள்ளிட்ட பொருள்களை ரேஷனில் வழங்காததை கண்டித்தும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

மயிலாடுதுறையில் பரபரப்பை கிளப்பிய சப்தம் வீடுகளில் விரிசல் மக்கள் அதிர்ச்சி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலிருந்து கைதி தப்பியோட்டம்