in

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை

 

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை ஒட்டி நெல்லை மாநகராட்சி சார்பில் நிலை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருதேரோட்டத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, துணைமேயர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

What do you think?

78- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பேரணி

பிக் பாஸ் 8…டில் பங்குபெறும் Contestants லிஸ்ட் இதோ