in

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை  உறுப்பினர் பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை  உறுப்பினர் பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்

 

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட குழு அலுவலகம் புதிதாக காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் கொடியை மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

ஜி பாரதிமோகன் நினைவகம் என்ற பெயரிலான புதிய கட்டிடத்தை கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து மறைந்த தலைவர்களான சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, உள்ளிட்டோரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

What do you think?

திடீரென்று கொட்டி தீர்த்த கனமழை, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

தமிழக அரசு உரிய நிவாரணம் கணக்கெடுப்பு செய்து வழங்குவதில்லை  கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு