in ,

டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக ராஜபாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக ராஜபாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்ய மருத்துவமனைக்கு வந்த அவருக்கு மருத்துவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொது மருத்துவ பிரிவு, கண் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புதியதாக கட்டப்படும் கட்டடத்தின் மதிப்பீடு மற்றும் மாதிரி வரைபடங்கள் குறித்து பார்வையிட்ட அமைச்சர், நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அருப்புக்கோட்டையில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கான பணிகள் நடைபெற்று வரும் அதே நிலையில் ராஜபாளையத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கட்டடத்தின் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்பணிக்கப்படும்.

வட கிழக்கு பருவமழை தொடங்கும் அதே நேரத்தில் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, காலரா போன்ற நோய் பாதிப்பும் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும். டெங்குவை பொருத்தவரை கடந்த 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தான் வீரியம் அதிகமாக இருந்தது.

2012ல் 66 பேரும், 2017 65 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். முதல்வரின் வழிகாட்டுதலோடு பல்வேறு சேவை துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு மிகப்பெரிய கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 10-க்கும் குறைவானவர்களே டெங்குவால் உயிர் இழந்துள்ளனர். இவர்களும் மருத்துவமனைக்கு வராமல் வீடுகளிலேயே சிகிச்சை பெறுவது, மருத்துவர்களை அணுகாமல் சரி செய்ய முயல்வது மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு டெங்கு பாதிப்பு வருகிற போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு மழை தொடங்கும் நேரம் வந்துவிட்ட நிலையிலும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை. அரசு மருத்துவமனை என்றாலே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் என்று முடிவு செய்வது தவறு. தேவையான அளவிலிருந்து சுமார் பத்து சதவீதம் மட்டுமே மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்த 10 சதவீத காலி இடமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து வகையான மருத்துவங்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சித்தா உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு பிசியோதெரபி மூலம் வைத்தியம் செய்யப்படுகிறது. வீடுகளுக்கு தேடிச்சென்று பிசியோதெரபி வைத்தியம் பார்க்கப்படுகிறது. ஐந்து வகையிலான மருத்துவங்களில் சுமார் 2 கோடி பேர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர்.

What do you think?

“டானா” புயல் காரணமாக நாகை உள்ளிட்ட 9 துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்