in

மொஹரம் பண்டிகை முன்னிட்டு பொது விருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்


Watch – YouTube Click

மொஹரம் பண்டிகை முன்னிட்டு பொது விருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

 

செஞ்சியில் மொஹரம் பண்டிகை முன்னிட்டு 3000 பேருக்கு பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தேசூர் பாட்டையில் அமைந்துள்ள மஸ்ஜித்தே ஃபத்தா பள்ளிவாசலில் மொஹரம்பண்டிகை முன்னிட்டு ஜியாபாத் என்னும் பொது விருந்து இன்று காலையில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர்கள் கஃபாரியன், ஆதில் பாஷா, கவுஸ் பாஷா சிராஜ், அனீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொது விருந்தினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

பொதுவிருந்து நிகழ்ச்சியில் 3000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், முன்னால் நகர செயலாளர் காஜா நஜீர், சையத் இக்பால், தொண்டரணி பாஷா, ரசூல், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

திமுக பிரமுகர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக வட்டச்செயலாளர் உதயகுமார் பேட்டி