in

மயிலாடுதுறை அருகே மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து ஒன்பது சவரன் நகை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருட்டு

மயிலாடுதுறை அருகே மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து ஒன்பது சவரன் நகை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மூவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 44. மல்லியம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்கு சென்ற நிலையில் இவரது மனைவி வளர்மதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளியில் தனது மகனை கொண்டு விட சென்றுள்ளார்.

வீடு திரும்பிய வளர்மதி வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோல் கதவுகளும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 10,000 பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது தகவல் அறிந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்ததுடன் சம்பவம் குறித்து குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது

புதுமை பெண் திட்டத்தில் பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு