மூவலூர் மகா மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளி திருவிழா
மூவலூர் மகா மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளி திருவிழா பக்தர்கள் தலையில் பால்குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் சந்திரபுஷ்கரணி தீர்த்த குளத்தின் மேல கரையில் அமைந்துள்ள மகா மாரியம்மன்க்கு காவேரி தீர்த்தக்கட்டத்தில் இருந்து திருமஞ்சனம் வேப்பிலை கரகம் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு மகா மாரியம்மன்க்கு பாலாபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கஞ்சிவாத்தல் நடைபெற்றது விரதம் இந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.