in

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்ட திமுகவில் இணைந்தனர்

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்ட திமுகவில் இணைந்தனர்

 

நாகையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதம ராமபுரம் ஊராட்சியில் செறுதூர் மீனவ கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்.

அக்கட்சியிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்வு நாகை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான என்.கெளதமன் முன்னிலையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், நாகை நகர கழக செயலாளரும் நகரமன்ற தலைவருமான இரா. மாரிமுத்து உள்ளிட்ட திமுக சால்வை அணிவித்து வரவேற்றனர்.

நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் மரிய சார்லஸ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாலமுரளி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மோகன்தாஸ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஜானி..யின் விருதை ரத்து செய்யுங்கள்

பெருமாள் ஆலயத்தில் பஜனை பாடல்களுடன் கோலாட்டம் ஆடி வழிபாட்டில் ஈடுபட்ட குழந்தைகள்