in

சித்தர்காடு நுகர் பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலையை அப்புறப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் குடியேறி சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-

அரசு நவீன அரிசி ஆலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், உமியை எரிப்பதால் கரி துகள்கள் படிந்து நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் சித்தர்காடு நுகர் பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலையை அப்புறப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் குடியேறி சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது இங்கு, பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் ஊற வைக்கப்பட்டு அவற்றை கொதிகலன்களில் எரித்து அரைத்து அரிசியாக மாற்றப்படுகிறது இதற்காக எரிப்பதற்கு நெல்லில் இருந்து எடுக்கப்படும் உமி பயன்படுத்தப்படுகிறது.

எரிக்கப்படும் உமி காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் படிந்து விடுகிறது இதனால் உணவு மற்றும் குடிநீரில் எப்பொழுதும் கரி துகள்கள் படிந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் புற்றுநோயால் பொதுமக்கள பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் உமியை எரிக்காமல், இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆலையை இழுத்து மூட வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்தும் சித்தர்காடு கிராமவாசிகள் மற்றும் கிராம பொது நல சங்கம் சார்பில் சுடுகாட்டில் குடியேறி சமைத்து சாப்பிடும் போராட்டம் துவங்கியது. 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்று உள்ளனர். வருவாய்த் துறையினர் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நோய் பாதிப்பு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

What do you think?

ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை

தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் மாநில செயலாளர் மயிலாடுதுறையில் நடைபெற்ற சங்க கூட்டத்திற்கு பின் பேட்டி