in

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை ஆலங்காடு திருவள்ளுவர் சிலை அருகே மீனவர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இவர்களது கோரிக்கைகளான திருவாரூர் மாவட்டம் கடல் மீனவர்கள் குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகாலமாக வழங்க வேண்டிய தடைக்காலம் மழைக்கால சேமிப்பு சந்தா போன்ற அரசால் வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் மானியங்களை உடனே வழங்கிட வேண்டும்

மீனவர்களுக்கான சேமிப்பு சந்தாவை மாத மாதம் முறைப்படுத்தி மீனவர்களிடமிருந்து பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை உப்பூர், ஆலங்காடு, தொண்டியக்காடு, கற்பகநாதர் குளம், வாடியக்காடு செங்காங்காடு, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுமார் 500 ற்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதனால் திருத்துறைப்பூண்டி -பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

What do you think?

நாகை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 333 மனுக்கள்;

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்