in

கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் 500 மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தண்ணீர் தர மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் 500 மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

காவிரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசு தலையிட்டு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கர்நாடக அணைகளில் 250 டிஎம்சி தண்ணீர் நிரம்ப இருந்தும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க மறுத்து அதற்கு ஆதாரமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள கர்நாடக அரசு கண்டித்தும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட ஒன்றிய அரசு அறிவுறுத்திட வேண்டும்

தமிழக அரசு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களை உடனடியாக கூட்டி பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டமானது நடைபெற்றது இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்

What do you think?

திருத்துறைப்பூண்டியில் கர்நாடக அரசை கண்டித்து 300 மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் வழக்கறிஞர் சங்கத்தினர் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்