in

காலை உணவு திட்டத்தை தமிழக தாய்மார்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள் செஞ்சி. மஸ்தான் பெருமிதம்

காலை உணவு திட்டத்தை தமிழக தாய்மார்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள் செஞ்சி. மஸ்தான் பெருமிதம்

 

காலை உணவு திட்டத்தை தமிழக தாய்மார்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள் -திண்டிவனத்தில் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் பெருமிதம்.

திண்டிவனம் அடுத்த இரட்டனையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான கலந்துக் கொண்டு பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், தாய்மார்களின் சிரமத்தை உணர்ந்து, மாணவர்கள் காலையில் பசியோடு கல்வி கற்க கூடாது என்ற தாய் உள்ளத்தோடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார் என்று கூறிய அவர், இந்த காலை உணவு திட்டத்தை தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் வெகுவாக பாராட்டுவதோடு, உலகில் உள்ள அனைவரும் பெருமையோடு பேசுகின்ற திட்டமாக இந்த திட்டம் அமைந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார் என்று கூறினார்.

What do you think?

திண்டிவனம் ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய துவஜாரோஹணம்

கோனேரிக்குப்பம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்