in

72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை எம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை எம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

 

திருத்துறைப்பூண்டியில் 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை எம்பி எம்எல்ஏ இணைந்து மக்கள் பயன்பாட்டுக்கு 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் கிராமத்தில் ரூபாய் 42.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகத்தை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விளக்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையனை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மக்கள் பயன்பாட்டுக்காக வைத்தார்.

அதேபோல 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன் , தனலட்சுமி செல்வம் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

விழுப்புரம் நாராயண நகர் சக்தி பீடத்தில் நவரா திருவிழா

தொண்டர்களிடையே கொந்தளிப்பு… தமிழக வெற்றி கழகத்திற்கு மீண்டும் 5 நிபந்தனைகள்