in

ஐந்து தலை நாகத்தின் மடியில் படுத்து ஊஞ்சல் ஆடி அருள் பாலித்த முத்து மாரியம்மன்

ஐந்து தலை நாகத்தின் மடியில் படுத்து ஊஞ்சல் ஆடி அருள் பாலித்த முத்து மாரியம்மன்

 

புதுச்சேரியில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தின் மடியில் படுத்து ஊஞ்சல் ஆடி பக்தர்களுக்கு அருள் பாலித்த முத்து மாரியம்மன்

அம்மன் மீது மலர்களை தூவி பக்தி பரவசத்தில் திளைத்த பக்தர்கள்

புதுச்சேரி திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் செடல் உற்சவம் கடந்த 18ம் தேதி ஐயப்பனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது.

இதையொட்டி முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து சிவன்– பார்வதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், உள்ளிட்ட ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் மற்றும் மலர்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு, ரோஜா, செவ்வரளி, மஞ்சள் அரளி, சாமந்தி உள்ளிட்ட ஒன்பது வகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தின் மடியில் அமர வைக்கப்பட்டு அம்மன் ஊஞ்சலாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மன் மீது மலர்களை தூவி பக்தி பரவசத்தில் திளைத்தனர்.

இதில், வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி

திருச்சியில் மன்னர் முத்தரையர் அரசு சதய விழா – மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மரியாதை