in

அக்டோபர் 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா

அக்டோபர் 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கும் வண்ணமாக மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இரத்தத்தில் கையெழுத்திட்டு அழைப்பு விடுத்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் “அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார், பசும்பொன்னிற்கு வரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க்க பாண்டிய மண்டலம் தயாராகி வருகிறது, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார், 2026 தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது, கலைஞர் பேரன் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் ஒரே ஆண்டில் துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார், மு.க.ஸ்டாலின் திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக பதவிக்கு வரும் போது எடப்பாடி பழனிச்சாமி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய கருத்துக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும், திமுக மெஜாரிட்டியில் உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவிக்கு வந்துள்ளார், அதிமுக 234 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து பணியாற்றி வருகிறோம், அதிமுக தொண்டர்கள் மிக எழுச்சியுடன் பணியாற்றி வருகிறார்கள், 2026 ல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கை வந்துள்ளது, ஒ.பி.எஸ் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சிக்கு எதிராக ஒ.பி.எஸ் வாக்கு அளித்தார், எடப்பாடி பழனிச்சாமி செல்லும் பாதை தான் சரியான பாதையாக உள்ளது, ஒ.பி.எஸ் துரோகத்தின் மொத்த வடிவமாக உள்ளார், ஒ.பி.எஸ் அதிமுக உடைவதற்கு காரணமாக இருந்தார், அதிமுகவின் வெற்றிக்காக ஒ.பி.எஸ் பாடுபடவில்லை, ஒ.பி.எஸ் – ன் நடவடிக்கையால் அதிமுக சட்டமன்ற தேர்தலில் 1,96,000 வாக்குகளை இழந்தது, அதனால் அதிமுக வெற்றி பெறாமல் தொண்டர்கள் ரோட்டில் அழைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர், நன்றியை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒ.பி.எஸ் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை, நம்பி சென்ற தொண்டர்களை ஒ.பி.எஸ் ஏமாற்றினார், சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க ஒ.பி.எஸ் நிபந்தனை வித்தார், பின்னர் ஒ.பி.எஸ் இருவரையும் ரகசியமாக சந்தித்தார்” என கூறினார்.

What do you think?

மதுரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒன்றரை சவரன் நகையை பறித்துச் சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு வருகிற 2025 ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான வரவேற்புக்குழு