in , ,

காரியாபட்டி கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் நாகபஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

காரியாபட்டி கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் நாகபஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

 

காரியாபட்டி அருகே கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு நாகம்மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை – 300 – க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கணேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புத்துக்கோயிலில் நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை உடன் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாகம்மாள் உற்சவ சிலைக்கு பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள் , இளநீர் ,தேன், திருநீர், அரிசிமாவு, பழச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் சிலையான நாகம்மாள், லிங்கம், அம்மன், சூலாயுதம், போன்ற சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும் நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு கால சர்ப தோஷம், நாகதோஷம், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சனை மற்றும் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த நாகபஞ்சமி திருவிழா சிறப்பு பூஜையில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி போன்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… நெருங்கிய நபரை இழந்து தவிக்கும் கீர்த்திசுரேஷ்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா தீர்த்தவாரி