in

நாகப்பட்டினம் – ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் – தீமிதி திருவிழா

நாகப்பட்டினம் – ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் – தீமிதி திருவிழா

 

இருக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சக்தி கரகம் முன்னால் செல்ல ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.

அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

தூத்துக்குடி ஆழ்வாா்திருநகாி – ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயில் – கொடியேற்றம்

நெல்லை – திருவழுதீஸ்வரர் திருக்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்