in

நாமக்கல் கிராயூர் மாரியம்மன் ஆலய தீர்த்த குட ஊர்வலம்

நாமக்கல் கிராயூர் மாரியம்மன் ஆலய தீர்த்த குட ஊர்வலம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் கிராயூர் அருள்மிகு விநாயகர், அருள்மிகு மாரியம்மன் ஆலயமகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிறு அன்று காலை 6 – 15 மணிக்கு விநாயகருக்கும் 7 மணிக்கு மேல் மாரியம்மனுக்குமிக விமர்சையாக நடைபெற உள்ளது

இதற்காக இன்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குட ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பின்னர் வரிசையாக தீர்த்தகுடங்களை வைத்த பின்னர்கோவில் பூசாரி தீர்ந்த குடங்களுக்கு மகாதீபாராதனை காண்பித்த பின் பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தவாறு மேல தாளத்துடன் பல்வேறு வீதிகள் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தனர் வருகை புரிந்தவருக்கு அன்னதான நிகழ்வு நடைபெற்றது

What do you think?

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆவணி மாத மூலநட்சத்திரத்தை முன்னிட்டு முத்தங்கி அலங்காரத்தில் திருக்காட்சி

நாமக்கல் வையப்பமலை அடுத்த ஏலூர்பட்டி பண்ணையம்மன் ஆலய ஆவணி தேர் திருவிதி உலா