in ,

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்த வாரி

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்த வாரி

 

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தீர்த்த வாரி வைபவம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

இவ்விழா கடந்த 4ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி வந்தன விழாவின் நிறைவாக தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது முன்னதாக உற்சவர் வெங்கடாஜலபதி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார் உடன் சர்வ அலங்காரத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் பெருமாளை அம்மன் தெப்பக்குளம் படிக்கரையில் எழுந்தருள செய்தனர் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தெப்பக்குளத்திற்கு தீப ஆராதனை கட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வுருக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து அர்ச்சகர்கள் பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி வைபவத்தை நடத்தினர்.

இதனை அடுத்து உற்சவர் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனைகள் செய்து நட்சத்திர தீபம் கும்ப தீபம் நாகதீபம் ஏக முக தீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர்.

What do you think?

மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம்