in ,

பெரியதச்சூர் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு புரட்டாசி மாத அம்மாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம்

பெரியதச்சூர் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு புரட்டாசி மாத அம்மாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம்

 

பெரியதச்சூர் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு புரட்டாசி மாத அம்மாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் பெரியதச்சூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு புரட்டாசி மாத அம்மாவாசை முன்னிட்டுயாக குண்டத்தில் மிளகாய், பழங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரித்தியங்கரா தேவிக்கு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அஇஅதிமுகவின் புதிய உறுப்பினருக்கான அதிமுக கழக அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார்