in

எந்த படத்திற்கும் இவ்வளோ கஷ்டப்பட்டதில்லை…விக்ரம்


Watch – YouTube Click

எந்த படத்திற்கும் இவ்வளோ கஷ்டப்பட்டதில்லை…விக்ரம்

 

விக்ரம் நடித்த தங்கலான் படம் நீண்ட போராட்டத்திற்கு பின் திரைக்கு வரும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன்காக பட குழுவினருடன் விக்ரம் விஜயவாடா சென்று இருக்கின்றார்.

அங்கிருக்கும் பிரபல ஹோட்டலில் தங்கி இருக்கும் விக்ரம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் பேசினார். மேலும் ரசிகர்களும் உங்கள் படத்தை நாங்கள் பார்க்க ஆவலோடு இருக்கிறோம் என்று அவரிடம் தெரிவித்தனர்.

விக்ரமும் என்னுடைய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு ரசிகர்களும் ஆர்வமாக அவருடன் பேச தொடங்கினார்.

பிறகு ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்ட விக்ரம். தங்களான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறியுள்ளார்.

இப்படம் குறித்து விக்ரம் கூறியதாவது நான் எந்த படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்ததில்லை. ஆனால் தங்கலான் படத்திற்காக நான் அதிகம் மெனக்கெட்டு இருக்கின்றேன். . வித்தியாசமான கதை, இந்த கதையில் கிளாமருக்கு இடமில்லை உங்களுக்கு புதிய உலகத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை இந்த படம் பார்க்கும் பொழுது ஏற்படுத்தும்.

தங்களான் படத்தின் இரண்டாம் பாகத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறி விடை பெற்று இருக்கிறார் விக்ரம்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் விஜய்..இக்கு அறிவுரை கூறிய திமுக எம்பி கனிமொழி

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சிவன் சக்தி அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்