in

எங்கள் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை… ஜிவி பிரகாஷ்

எங்கள் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை… ஜிவி பிரகாஷ்

 

எங்கள் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை… தரம் தாழ்ந்து கருத்துகளை வெளியிட வேண்டாம் … ஜிவி பிரகாஷ்

கடந்த சில தினங்களாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவை அறிவித்த நிலையில் எதற்காக இருவரும் பிரிந்தார்கள் என்ற காரணத்தை ஊடகங்கள் அனுமானத்துடன் பல காரணகளை கூற இதனை பார்த்து கோபம் கொண்ட ஜீவி பிரகாஷ் சோசியல் மீடியாவில் நீண்ட பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது எங்கள் பிரிவை பற்றி ஊடகங்கள் பலவிதமாக பேசுகின்றனர் எங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை இருந்தபோதிலும் சில ஊடகங்கள் தரம் தாழ்த்தி எங்களை பற்றிய விஷயங்களை வெளியிடுவதால் அவர்களுக்காக இந்த அறிக்கையை வெளியிடுகின்றேன்.

உண்மை என்னவென்று தெரியாமல் யாரும் எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம் உண்மைக்கு புறம்பாக பதிவுகளை வெளியிட வேண்டாம்.

எங்களை பிரபலமாகிய உரிமையிலோ எங்கள் தனிப்பட்ட வாழ்வின் மேல் உள்ள அன்பினால் கருத்துகளை வெளியிடுகிறார்கள் சிலர் ஆனால் அது எங்களை காயப்படுத்துகிறது.

இது தமிழர் பண்பா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தனி மனித நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று கேட்டுள்ளார்.

இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்து தான் எடுத்தோம் எனக்கு சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதால் தான் இந்த பிரிவு என்று சிலர் கூறுவது எனக்கு வேதனை அளிக்கிறது என்ற ஜி வி பிரகாஷ் கூடியிருக்கிறார்.

What do you think?

என்னை சீரியலில் இருந்து நீக்கியதற்கு சேனல் பதில் சொல்ல வேண்டும்’

OTT..யில் வெளியாகும் கவினின்… ஸ்டார்