in

திருவாரூர் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து


Watch – YouTube Click

திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழா இன்று அதிகாலை நிறைவடைந்தது. இதில் சிறப்பாக நகரை தூய்மையாக வைத்திருக்க பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஈர உள்ளம் அமைப்பில் சார்பில் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு, அசைவ விருந்து வழங்கப்பட்டது.
இதில் திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்


Watch – YouTube Click

What do you think?

டிராக்டரின் பின்னாடி படுத்துறங்கியவர் மீது டிப்பர் கவிழ்ந்து விபத்து

பிரபல இயக்குநர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்