in ,

ஒலக்கூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது

ஒலக்கூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் இரவு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆறாம் ஆண்டு தேர் திருவிழாவில் 23 ஆம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மேலும் 4ம் நாள் மூலவர் முத்தாலம்மன் மற்றும் உற்சவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை, பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் உற்சவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் சிம்மா வாகனத்தில் இரவு வீதி உலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

What do you think?

நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது – டாக்டர் ராமதாஸ் பேட்டி

திண்டிவனம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா