in

செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக, செஞ்சி நகர கழக திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு முன்னிட்டு நினைவு மலர் தூவி மரியாதை

செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக, செஞ்சி நகர கழக திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலமாக சென்று அவரது திருவுபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்..

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பொறுமையையும் – வேகத்தையும், தன்னுடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் பாடமாக கற்றுக்கொடுத்த தமிழினத்தலைவரின் 6வது ஆண்டு நினைவு நாள்

இந்த நினைவு நாளை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாஉள்ளிட்ட உலக நாடுகளில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

.செஞ்சி ஒன்றிய திமுக,மற்றும் செஞ்சி நகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு தினம் செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டில்,மற்றும் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று செஞ்சி நான்கு முனை கூட்ட சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டுமௌன ஊர்வலம் அனுசரிக்கப்பட்டது.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் வழிகாட்டுதலின்படி

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்,துணை சேர்மன் ஜெயபாலன் பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக்,,ஒன்றிய அவைத் தலைவர்கள் ஆறுமுகம், வாசு, ஒன்றிய பொருளாளர் இக்பால், ஒன்றிய துணை செயலாளர்கள் அனுசுயா, குமார், மதியழகன், செல்வமணி, தாட்சயாணி,மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை,கோடீஸ்வரன்,ஒன்றிய கவுன்சிலர் மணி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி,பாலகிருஷ்ணன், குப்பன், லியாகத் அலி,முன்னாள் கவுன்சிலர்கள் ரேவதி கணேசன், பரசிவம், ஆவின் இயக்குனர் மாத்தூர் தாஸ்,.. ஒன்றிய இளைஞர் அணிஅமைப்பாளர் பழனி,துணை அமைப்பாளர் செஞ்சி பழனி,ஊராட்சி நிர்வாகிகள் காந்தி, தாஜுதின்,வீரப்பன், குப்பன்உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் கலைஞரின் திருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

What do you think?

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பட்டம் மகா மாரியம்மன் திருக்கோயிலில் பால்குட உற்சவம்

சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் – மூன்று காவலர்களுக்கு மெமோ பொறுப்பு டிஐஜி நடவடிக்கை