in

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்

 

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க.வினர். பெரியார் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி, தீண்டாமை உறுதிமொழியேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பகுதிகளில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

செம்பனார் கோயில் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் தி.மு.க.வினர் கூடி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

பின் தி.மு.க.வினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர் அதுபோல் மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் தலைமையில் தி.மு.க வினர் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான தி.மு.க வினர்கள், கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.

What do you think?

தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

மீண்டும் வில்லனாக நடிகர் சூர்யா