in

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 20 நாட்களில் நிரம்பியது


Watch – YouTube Click

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 20 நாட்களில் நிரம்பியது

 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 20 நாட்களில் நிரம்பியது. இதைத் தொடர்ந்து கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.2.55 கோடியை தாண்டியது.

தமி்ழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிரம்பியது.

இதையடுத்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இரு நாட்கள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 55 இலட்சத்து 37 ஆயிரத்து 740 கிடைத்தது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 965 கிராமும், வெள்ளி 29,158 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 574 ம் கிடைத்தன.

இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கோடை விடுமுறை முடிந்த பின்னர் இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை

இந்த வாரம் முதல் ஹிட் சீரியல்கள் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகிறது