in

பழனி – முருகன் கோவில் – வைகாசி விசாக திருவிழா – கொடியேற்றம்


Watch – YouTube Click

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து காலை கொடியேற்றம் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் வைகாசிவிசாகத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவான 21-ம் தேதி மாலை அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெயாவானை திருக்கல்யாணமும், தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 7-ம் நாளான 22 ம்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. வருகின்ற 25 ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் லட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

திருப்பத்தூர் வேட்டப்பட்டு – முத்து மாரியம்மன் ஆலயம் – தேர்த்திருவிழா

மதுரை கூடல் நகர் திருக்கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கூடலழகர் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா