in

அய்யலூர் அருகே விலங்கு கருப்பணசாமி கோயிலில் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு 

அய்யலூர் அருகே விலங்கு கருப்பணசாமி கோயிலில் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு 

 

அய்யலூர் அருகே விலங்கு கருப்பணசாமி கோயிலில் 150 கோழி 100கிடாய்கள் பலியீட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே  ரோட்டுப்புதூர் விலங்கு கருப்பண்ணசாமி கோவிலில் சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும் கடவூர் செல்லும் சாலையில் உள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கால்நடைகள் நன்றாக வளர வேண்டும் என்றும். ஆடு,கோழி போன்ற கால்நடை உயிரினங்கள்  நல்ல விலையில் விற்பனை செய்து லாபம் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு செல்கின்றனர்.

இந்தக் கோவிலில் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆடி மாதத் திருவிழாவில் ஆடு கோழிகளை பலியிட்டு  பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவில் 1250 கிலோ அரிசி படையலிட்டு நூறு ஆடுகள் 150 நாட்டுக் கோழிகள் பலியிட்டு அதிகாலை 6 மணி முதலே அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பொங்கல் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விலங்கு கருப்பணசாமி கோவிலில் வழிபாடு நடத்தி அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

அசைவ அன்னதானம் ஆனது  மதியம் முதல் மாலை வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டுப்புதூர் கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் மற்றும் அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.

What do you think?

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை கோரி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பழனி அருகே மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் வழிபாடு