in

சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் பெருமாள் மகாலட்சுமி திருக்கல்யாணம்

சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் பெருமாள் மகாலட்சுமி திருக்கல்யாணம்

 

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் பெருமாள் மகாலட்சுமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து உற்சவர் பெருமாள் மற்றும் தாயாரை மனக்கோளத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து திருக்கல்யாணம் வைபவம் துவங்கியது பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை சமர்ப்பித்தனர் பின்னர் சுவாமிக்கு கங்கணதானா கட்டுதல் பூணூல் அணிவித்தல் பட்டு வஸ்திரம் பட்டு சேலை சாத்துதல் மாலைமாற்று வைபவம் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கன்னிகாதானம் பூஜைகள் நடத்தி வேத மந்திரங்கள் முழங்க தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டன.

பின்னர் கோடி தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தெய்வத் திருகல்யாணத்தைக் கண்டு வழிபாடு செய்தனர்.

What do you think?

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத (துலா விஷு புண்யகாலம்)

சிவகங்கை ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது