in

கோயில் உண்டியல் உடைப்பு போலீசார் விசாரணை

நாகை அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயில் உண்டியல் உடைப்பு: காசு, பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை நடு வயலில் வீசி சென்ற மர்ம நபர்கள் கீழ்வேளூர் போலீசார் விசாரணை

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடியில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் இரவு மர்ம நபர்கள் ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக பிரிக்காத இருந்த உண்டியலை திருடி எடுத்துச் சென்றவர்கள் அங்குள்ள நடு வயலில் வைத்து உடைத்து பணம், காசுகளை எடுத்துக் கொண்டு உண்டியலை அங்கேயே வீசி சென்றுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக உண்டியல் பிரிக்காத நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது போலிசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

What do you think?

இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 08.07.2024 | Today Weather News

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு