in

காவல்துறையினர் நடத்திய சோதனை கடத்திவரப்பட்ட பொருள் பறிமுதல் காவல்துறை நடவடிக்கை


Watch – YouTube Click

காவல்துறையினர் நடத்திய சோதனை கடத்திவரப்பட்ட பொருள் பறிமுதல் காவல்துறை நடவடிக்கை

 

செம்பனார்கோயில் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய சோதனையில் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 900 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் மூன்று பேர் கைது காவல்துறை நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே காளஹஸ்திநாதபுரம் பெட்ரோல் பங்க் அருகில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது காரில் 18 மூட்டைகளில் 900 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த முருகேசன் மற்றும் காரில் இருந்த சுமன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மணக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

டெல்டா காப் பைக் பேட்ரோல் அறிமுகம்

அரண்மனை 4 வெற்றியால்… ராகவா லாரன்ஸ்.க்கு வந்த விபரித ஆசை