in

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலிருந்து கைதி தப்பியோட்டம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலிருந்து கைதி தப்பியோட்டம்

 

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலிருந்து கைதி தப்பியோட்டம்
ஏற்கனவே பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கைதி தப்பியோடிய நிலையில் மேலும் ஒரு கைதி தப்பி ஓட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை,
பங்களாதேஷ் , நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாஸ்போர்ட் இன்றி கள்ளத் தோனி மூலம் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி இருந்தது,
ஆயுத கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் என்பவர் இன்று காலை தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை எண் 9 ன் ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து தப்பியோடி விட்டார்.
இலங்கையைச் சேர்ந்த இவர் மீது சென்னை கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டார்.

கடந்த 2019 ம் ஆண்டு பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் (வயது, 55) என்பவர், கடந்த 2019ம் ஆண்டு, ஆன்-லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தப்பி ஓடி விட்டார்.

தப்பி ஓடிய அவரை இதனால் வரை கண்டுபிடிக்காத நிலையில் மேலும் ஒருவர் தப்பி ஓடிய நிகழ்வு திருச்சி சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மனையை உட்பிரிவு செய்துகொடுக்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது