in

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்த பாட்டி மற்றும் பேரன் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மீனாட்சி வாய்க்கால் பகுதியில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து எஸ்ஐ முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது பாண்டிச்சேரி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த சுகாசன்(19) அவரது பாட்டி ஏலம்மாள் (62)ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது சுகாசன் என்பதும் ஏலம்பாள் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 180 ml அளவு கொண்ட 99 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

What do you think?

திருவாரூரில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கத்தினர் தர்ணா போராட்டம்

நடுக்கடலில் அதிபத்த நாயானார் சிவனுக்கு தங்கமீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் வித்தியாசமான திருவிழா