in

தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது

தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது

 

மதுரையின் காற்றை ரசிப்பேன் – தங்கலான் போன்ற படத்தை எடுக்க தைரியம் வேண்டும் அதை ரஞ்சித் செய்துள்ளார் – தங்கலான் திரைப்பட புரமோசன் விழாவில் நடிகர் விக்ரம் பேச்சு

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா, பார்வதி உட்பட திரைப்படக் குழுவினர் பலர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களிடையே உரையாடிய நடிகர் விக்ரம், “தூள் படத்தில் வரும்” மதுரை வீரன் தானே” என்ற பாட்டை பாடி பேச துவக்கி, மேடையில் இருந்து கீழே இறங்கி கல்லூரி மாணவ, மாணவிகளை அருகில் சென்று சந்தித்தார். பின்னர் படத்தில் நடிக்கும் சக நடிகர் மற்றும் நடிகைகளின் பெயரை சொல்லி மாணவர்களிடத்தில் உச்சரிக்க வைத்தார்.

அப்பா பரமக்குடி, அம்மா தஞ்சாவூர் பரமக்குடியில் இருந்து படிப் படியாக வந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது தந்தை படித்தார். எனது இரு அத்தைகளும் இங்கு இருந்ததால் சிறு வயதில் அடிக்கடி வந்து மதுரையின் காற்றை சுவாசப்பேன். வைகை ஆற்றில் சுற்றித் திரியும் கழுதைகளை பார்த்து ரசிப்பேன். அழகர் கோவில் சென்று அங்கு உள்ள பருவநிலையை பார்த்து இங்கிலாந்தில் உள்ளது போல் நினைத்து இருக்கின்றேன்.

தங்கலான் போன்ற ஜனரஞ்சகமான படைப்பை கொடுத்த இயக்குனர் ரஞ்சித்- க்கு மிக்க நன்றி. இது போன்ற திரைப்படத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய “தில்” வேண்டும். இந்த படம் விடுதலையை பற்றியும், சுதந்திரத்தை பற்றியும் சுதந்திர தினத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் ஒரு அர்த்தம் உள்ளது” என்றார்.

விழா மேடையில் நடிகை பார்வதி தங்கலான் படத்தில் இருந்து பாடலை பாடினார். பின்னர் மாணவ, மாணவிகள் செல்ஃபோன் டார்ச் லைட்டை காண்பித்த நிலையில் படக்குழுவினர் மேடையில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இறுதியாக படத்தின் டிரெய்லர் மாணவர்களிடையே ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பிக் பாஸ் சீசன் 8….டை தொகுத்து வழங்குபவர் எல்லோருக்கும் பிடித்த மக்கள் நாயகன்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காமல் மௌனமாக காத்திருப்பதில் மர்மம் என்ன?