in

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து


Watch – YouTube Click

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

 

மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வராக பதவி ஏற்கும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தங்கள் வழிகாட்டுதலும் இடைவிடாத சேவையும் இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. இந்த வெற்றி உங்கள் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துள்ளது. தங்கள் அசாத்திய வெற்றிக்கு எனது நலவாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்

அதுபோல, நடைபெற்று முடிந்த ஆந்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில், வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுக்கும், முதலமைச்சர் ரங்கசாமி தனது வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில் ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த வெற்றி ஆந்திரப் பிரதேச குடிமக்களுக்கு நிச்சயமாக புதிய நம்பிக்கையையும் பிரகாசமான வாழ்க்கையையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மத்தியில் அமைய உள்ள மோடியின் ஆட்சி குறை பிரசவ ஆட்சி, 5 வருடம் நீடிக்காது

சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கினார்